காங்கிரஸ் தலைவராக இருந்த சீனிவாச அய்யங்கார், அன்றைய பிரபல இன்ஜினியர் திருமலை அய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், விசுவேசாய்யா போன்ற பெருமக்கள் தொடர்ந்து இந்தத் திட்டத்தினை வலியுறுத்தி வந்தனர். நாடு விடுதலையடைந்த பின்னரும் இந்தத் திட்டம் நனவாகவில்லை ஆனால், தண்ணீரின் முக்கால் பகுதி எத்தனையோ கோடி ஏக்கருக்குப் பாசனம் தரத்தக்க தண்ணீர் வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்த ரஜினிகாந்த் அரசியல் வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ‘தென்னக நதிகளையாவது இணையுங்கள். அதற்கு எத்தனை கோடிகள் தேவை? துணிந்து செயல்படுங்கள். அந்தக் கோடிகள் வரும்’ என்றார். அவருடைய கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழகம் ஆந்திரா, கர்நாடகா கலைஞர்கள் மனது வைத்தால் குறிப்பிட்ட அளவுக்கு இந்தத் திட்டத்துக்கு உதவ முடியும்
தென்னக நதிகள் இணைப்பு என்பதுதான் என்ன? 1969-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் சிறந்த இன்ஜினீயர். கங்கை காவிரி இணைப்பு இல்லையென்றால் தென்னகம் எதிர்காலத் தில் பாலைவனம்தான் என்று எச்சரித்தார். ஆனால், அன்றாட அரசியலில் நாட்டம் கொண்ட அரசியல்வாதிகள் இவ்வளவு பெரிய திட்டத்துக்கு நிதிக்கு எங்கே போவது என்று பெருமூச்சுவிட்டனர்.