இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டின்போது ரஜினி குறித்து ஞானவேல் பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஞானவேல், ” தமிழ் சினிமாவுல எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அழைச்சுப் பாராட்டுவார். அதே மாதிரி ‘ஜெய் பீம்’ படத்துக்கு ரஜினி சார் பாராட்டுவாருன்னு நினைச்சேன். ஆனால் அவர் கூப்பிடவே இல்ல. நான் அவர் கூப்பிடுவார்னு புது சட்டை எல்லாம் வாங்கி வச்சு இருந்தேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு செளந்தர்யா மெசேஜ் பண்ணாங்க. அதுக்குப் பிறகு அப்பாவுக்கு ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போ நான் சும்மா இல்லாம இந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு செளந்தர்யா மேம், ‘அப்பாவும் உங்க ஜெய்பீம் படம் பார்த்துட்டாங்க ரொம்பப் பிடிச்சுருக்குனு சொன்னாங்க,’னு சொன்னார். ஒரு நாள் ரெண்டு கதை எடுத்துட்டுப் போனேன்.