அபூர்வராகங்கள் படத்தில் அந்த அகல கண்களை சுழற்றி, நடிகர் கமலிடம் “கேள்வியின் நாயகனே… என் கேள்விக்கு பதில் என்னயா…” எனக் கேட்டாரே, அந்த கேள்விக்கான பதிலை நடிகர் கமல் ஹாசன் ஒரு பேட்டியில், “நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிச்சேன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அவங்க எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும்தான் அதில் எந்த சந்தேகமும் இல்ல. அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடியனும் என்றெல்லாம் அவசியம் இல்லை” என ஸ்ரீ வித்யாவின் நிறைவேறாத காதலை நினைத்து உருகியிருப்பார்.
கைக் கூடாதா காதல், மகிழ்ச்சி இல்லாத திருமண வாழ்க்கை, சுற்றிலும் நடந்த துரோகம், கடைசிவரை தனிமை, மரணம் வரை நோயுடன் போராட்டம் இத்தனைக்குப் பிறகும், தன் சொத்துகளை இந்த சமுகத்துக்கே கொடுத்து சென்றிருக்கிறார் ஸ்ரீ வித்யா என்றால், அவர் மனிதத்தை எவ்வளவு நேசித்திருப்பார்… அவரின் நினைவு தினமான இன்று அவரின் ஆன்மாவுக்கு நினைவஞ்சலி!
அவர் நடித்த படங்களில் நீங்கள் சிலகித்த ஒரு கட்சியை கமெண்டில் சொல்லுங்களேன்…
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX