அப்போ அப்பா என்கிட்ட வந்து, ‘நான் யார்கிட்டையும் ரெக்குவஸ்ட் பண்ணி எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூல்ல நின்னு கேட்டு சீட்டு வாங்கியிருக்கேன். தயவு செஞ்சு நல்லா படிச்சிடு’ அப்டீன்னு சொன்னார்.

அப்போ எனக்கு, ‘நமக்காக அப்பாவ ஒரு மணிநேரம் நிக்க வச்சிட்டோமே’னு ரொம்ப வருத்தப்பட்டேன். ‘இப்போ அதே ஸ்கூல்ல சிறப்பு விருந்தினராக வந்திருக்கேன், அப்பா…’. பெரிய ஹீரோ, பிரபலம் என்பதெல்லாம் பெரிய விஷியமில்லை. இங்க இருக்க ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்று பள்ளிக்கால நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.