அந்தப் பதிவில், “எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது இப்படி நாசமாக்க இல்லை. AI மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களைப் பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். இதுபோன்ற AI எடிட் ஆபாச வீடியோக்களால் பெண்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.