இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பிரேம் குமாரின் ’96’ திரைப்படம் குறித்தும் ‘மெய்யழகன்’ படம் குறித்தும் பேசியிருக்கிறார் நடிகர் கார்த்தி.
இதுகுறித்துப் பேசியிருக்கும் நடிகர் கார்த்தி, “இயக்குநர் பிரேம் குமாரின் ’96’ திரைப்படம் நம் அனைவரையும் மிகவும் கவர்ந்து, மனதில் நின்ற திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், பின்னணி இசை, பாடல்கள், நடிப்பு என அனைத்துமே சிறப்பாக அமைந்த திரைப்படம். படத்தின் வசனத்தில் ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டிருந்தாலும் படம் வேறுமாதிரியாகியிருக்கும். ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கும். நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்து அந்தப் படத்தை இயக்கியவர் பிரேம் குமார். அந்தப் படத்தை அவ்வளவு ரசித்திருக்கிறேன் நான்.