சமீபத்தில் ‘கடல், ‘தனி ஒருவன்’, ‘போகன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ என வில்லன், கதாநாயகன் என தனது செகண்ட் இன்னிங்ஸில் கலக்கி வருகிறார். தற்போது ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமம் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி என இருவரும் கிராமத்துக் கதையில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இதையொட்டி நேற்று இரவு சென்னையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ‘மெய்யழகன்’ படம் தன் வாழ்வில் நடந்தக் கதை என்று சஸ்பென்ஸ் வைத்துப் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ரொம்ப அழகான இந்தக் கதையில் நடிக்கவும், அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் பிரேம் குமாருக்கு நன்றிகள்.