கிரிக்கெட்டில் இரு ஆண்களின் ஈகோ பிரச்னை, அதிலேயே இன்னொரு லேயராக சாதிய பிரச்னை, இதற்கிடையில் காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு, விஜயகாந்த் பாடல்கள் என எதையும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி முழுமையான படமாக வந்திருப்பதை தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இத்தகைய வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இன்று சக்ஸஸ் மீட் நடத்தினர். படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பேசிய படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான ஸ்வாசிகா, “ரொம்ப எமோஷனலான தருணம் இது. என்னோட முதல் படம் 16 வயசுல பண்ணேன். கனவோடு சென்னைக்கு வந்தேன். ஆனா எதுவுமே நடக்கல. நானும், அம்மாவும் மனவருத்தத்தோட ரயிலேறி கேரளா போய்ட்டோம்.