சந்தானத்துடன் இணைந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ஆண்டனி சினிமாவிலிருந்து விலகிப் பிறகு தேவையில்லாத நண்பர்களின் சேர்க்கையினால்தான் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்ததாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து அவர், “ முதல்ல எனக்கு சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வந்தது. சந்தானம்கூட தான் முதல்ல இருந்தேன். அதுக்குப் பிறகு தனியாக வாய்ப்பு தேடுறேன்னு வெளிய போனேன்.
அப்போகூட சந்தானம் அட்வைஸ் பண்ணுவார். நான் அதைக் கேட்காமல் இருந்தேன். பிசினஸ்லாம் பண்ணேன்.
அப்போ என் வாழ்க்கைல தேவையில்லாத நண்பர்கள்கூடலாம் சேர்ந்தேன். அவங்க பேசுற எல்லா விஷயத்தையும் நான் ஜாலியாக எடுத்துக்கிட்டேன்.
அப்போ என்னை பல பிசினஸ் பண்ண வச்சு என்கிட்ட இருந்த எல்லா பணத்தையும் திருடிக்கிட்டு போயிட்டாங்க.” எனக் கூறியிருந்தார். `ஏ1′ படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள `மெடிக்கல் மிராக்கிள்’ படத்தில் நடித்திருக்கிறார் ஆண்டனி.