அப்படி நடத்தினால் யார் அதற்கு தகுதியான நபர் என்பது குறித்து ரசிகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிராண்ட் சார்பாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் அமிதாப் பச்சனுக்கு பதில் கோன் பனேகா குரோர்பதியை நடத்தக்கூடிய நபர் தேர்வில் முதலிடத்தில் நடிகர் ஷாருக் கான் இருக்கிறார். இதில் இரண்டாவது இடத்தில் அமிதாப் பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். அதேசமயம் மூன்றாவது நபர் பாலிவுட்டிற்கு வெளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இக்கருத்துக்கணிப்பில் 768 பேர் பங்கேற்றனர்.
அவர்களில் 360 பேர் பெண்கள் ஆவர். இந்தி பேசும பகுதியில் மட்டும் இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கருத்துக்கணிப்பு வெளி வந்தபோதிலும் சோனி டிவியோ அல்லது அமிதாப் பச்சனே இன்னும் கோன் பனேகா குரோர்பதியை வேறு ஒருவர் நடத்தப்போகிறார் என்று தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.