இந்நிலையில் அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டிருக்கிறார். ” சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்த தேதிகளில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.