சினிமாவில் `50 திரைப்படங்கள்’ என்ற மைல்கல்லை எட்டியிருக்கிறார் தனுஷ்.
இவருடைய 50-வது திரைப்படமான ‘ராயன்’ சமீபத்தில் வெளியாகியிருந்தது. 50-வது படத்தை ஸ்பெஷலாக அவரே இயக்கினார். டைரகஷனில் இதுமட்டுமல்லாமல் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். நடிப்பைத் தாண்டி டைரக்ஷனிலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார், தனுஷ்.
இந்த இரண்டு படங்கள் மட்டுமல்ல தற்போது தான் அடுத்ததாக இயக்கிவரும் திரைப்படம் குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ். ‘இட்லி கடை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தனுஷின் டைரக்ஷன் கரியரில் நான்காவது திரைப்படம். ‘ராயன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்திருந்தார்.
இதன் பிறகு ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு தனது நண்பர் ஜி.வி.பிரகாஷுடன் கூட்டணி அமைத்திருந்தார். தற்போது அடுத்த டைரக்ஷனான ‘இட்லி கடை’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். டைரக்ஷ்ன் மட்டுமல்ல நடிப்பிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார் தனுஷ். இவரின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. டோலிவுட் இயக்குநர் சேகர் கமுலா இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தேவி. ஶ்ரீ.பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படங்களின் படப்பிடிப்பெல்லாம் டேக் ஆஃப் ஆகிவிட்டது. இதை தாண்டி நடிப்பில் முக்கியமான சில லைன் அப்களையும் வைத்திருக்கிறார் தனுஷ். பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஏற்கெனவே ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ என இரண்டு இந்தி படங்களில் நடித்தார். இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்தாண்டே வந்துவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல், இயக்குநர் மாரி செல்வராஜுடனும் ஒரு படத்தை கமிட் செய்து வைத்திருக்கிறார் தனுஷ் . இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது. மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இதை தாண்டி தற்போது மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். ‘இத்திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன்’ என ‘வாழை’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த லிஸ்டை தாண்டி நடிப்பதற்கு இன்னும் உறுதிப்படுத்தப்படாத சில திரைப்படங்கள் இருக்கிறதாம்.
டைரக்ஷன், நடிப்பு என படு பிசியாக இருக்கும் தனுஷ், அடுத்தாண்டு பல ஹிட் படைப்புகளை அடுக்குவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX