‘சேது’ வெளியான டிசம்பர் 10ம் தேதி என்பதால், பாலாவிற்கான விழாவையும் நாளை (டிசம்பர் 10) நடத்த திட்டமிட்டோம். ஆனால், குறுகிய காலம் என்பதாலும், இதே மாதத்தில் ‘வணங்கான்’ இசை வெளியீடும் இருந்ததால், விழாவை 18ம் தேதி அன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். ‘உங்களுக்கு ஒரு விழா’ நடத்தப் போகிறோம் என்று பாலா அண்ணனிடம் சொன்னதும், ‘அதெல்லாம் வேணாம்’ என விடுவிடுவென சொல்லி விட்டார். அவர் அவரது கலைப்பயணத்தை கௌரவிப்பது திரைத்துறையினரின் கடமை என கருதுவதால், விழா எடுக்க தீர்மானித்தோம். விழா குழுவில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, மிஷ்கின், சமுத்திரகனி, ராம், ஏ.எல்.விஜய் மற்றும் அருண்விஜய் ஆகியோர்
இணைந்துள்ளனர். பாலாவின் படத்தில் நடித்திருப்பவர்கள் உள்பட அனைவரையும் விழாவிற்கு அழைக்கின்றோம். விழாவிற்கான பணிகள் இப்போது தான் தொடங்கியிருக்கிறோம். யார் யார் வருகிறார்கள் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். தமிழ்த் திரையுலகின் அனைத்து நண்பர்களையும் ஒரே குடும்பமாய் நின்று வாழ்த்த வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.” என்கிறார் சுரேஷ் காமாட்சி.