‘மஹர்’, ‘மாங்’, ‘பேஷ்வாய்’ உள்ளிட்ட சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றும், “3000 ஆண்டுகள் அடிமைத்தனம்” என்பதை “எத்தனை ஆண்டுகள் அடிமைத்தனம்” என மாற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இயக்குநர் மகாதேவன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் அனுராஜ் கஷ்யப். அது ஒரு மோசடி அமைப்பு என தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சாடியுள்ளார்.
“முழு அமைப்பும் மோசடியானது”

“பஞ்சாப் 95, டீஸ், தடக் 2, புலே – இன்னும் எத்தனை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை… இந்த சாதிய, பிராந்தியவாத, இனவெறி அரசாங்கம் கண்ணாடியில் தங்கள் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறது.” எனக் கூறியுள்ளார். “அவர்களை எது தொந்தரவு செய்கிறது என்பதை வெளிப்படையாகக் கூட சொல்ல முடியாத கோழைகள்”. என்றவர்,
“திரைப்படத்தை எதிர்க்கும் குழுக்கள் எப்படி வெளியீட்டுக்கு முன்பே படத்தை அணுகுகின்றனர்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.