நயன்தாரா ஆவணப்படம்: தனுஷ் வழக்கை நிராகரிக்க கோரிய நெட்ஃப்ளிக்ஸ் மனு தள்ளுபடி | Netflix petition seeking dismissal of actor Dhanush lawsuit dismissed

நயன்தாரா ஆவணப்படம்: தனுஷ் வழக்கை நிராகரிக்க கோரிய நெட்ஃப்ளிக்ஸ் மனு தள்ளுபடி | Netflix petition seeking dismissal of actor Dhanush lawsuit dismissed


சென்னை: நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு, நடிகர் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ்சிவன் மற்றும் தங்களது நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க கோரி நெட்ஃப்ளிக்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்ஃப்ளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, “திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு ஒண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020-ம் ஆண்டே வெளியானது. ஆனால், தாமதமாக 2024-ம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தொடர முடியாது. இந்தக் காட்சிகள் கடந்த 2020-ம் ஆண்டு முதலே பொதுத்தளத்தில் உள்ளது. மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததார். இந்த ஆவணப்படம் தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி அன்று தனுஷிடமிருந்து நெட்ஃப்ளிக்ஸ்க்கு வழக்கறிஞர் நோட்டீஸ் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டது. ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு தனுஷின் ஒண்டர்பார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் மனுதாரருக்கு சொந்தம். ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்ட போது, 3 வினாடி காட்சிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனடியாக அந்த காட்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டது. அதற்கு நயன்தாரா தரப்பில், பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவெளியில் கடிதம் எழுதினார்.

படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தான போது ஒண்டர்பார் நிறுவன அலுவலகம் வீனஸ் காலனியில் இருந்தது. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை. நயன்தாரா ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்துக்கே சொந்தமானது. இதையெல்லாம் ஒப்புக்கொண்டு தான் ஒப்ந்தத்தில் கையெழுத்திட்டார்.

படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் ஒண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே, இது காப்புரிமை சட்டத்துக்கு பொருந்தும். படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெற்றது. அதேபோல், ட்ரெய்லர் மற்றும் படம் சென்னையில் தான் வெளியிடப்பட்டது” என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், ஒண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்ஃப்ளிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஒண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1348686' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *