Vettaiyan: ``கெட்ட பையன் சார் இந்த காளி... அது நானில்ல பாலுமகேந்திரா தான்'' - கலங்கிய ரஜினி! | Rajinikanth talks about his film success

Vettaiyan: “கெட்ட பையன் சார் இந்த காளி… அது நானில்ல பாலுமகேந்திரா தான்” – கலங்கிய ரஜினி! | Rajinikanth talks about his film success


த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், சாபுமோன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முள்ளும் மலரும் படத்தில் “கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனம் பேசியது நானில்ல. அது பாலுமகேந்திரா.

‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தில் முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார்கள். நான் என்னால முடியாது எனச் சொல்லி, ஷூட்டிங் ஸ்பாட்லிருந்து கிளம்பிவிட்டேன். எஸ்.பி.எம் சார் என்னைக் கூப்பிட்டு, உன்னால முடிஞ்சதை பண்ணு. பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக்கிறேன்னு சொன்னார். ‘ஆறிலிருந்து அறுபதி வரை’ படத்தோட ஷுட்டிங்ல பாதிலேயே படத்தை விட்டுட்டு போயிட்டேன்.

கமலுக்கு ஸ்ரீ தேவி மாதிரி ஹீரோயின்கூட நடிக்க வச்சாங்க. எனக்கு டிராமா நடிகர்களோட நடிக்க வச்சாங்க. அப்படி வெள்ளை தாடி வச்சு ஆறிலிருந்து அறுபது வரை படத்துல நடிச்சேன். அப்புறம் ஒரு மாதிரி நல்ல டிராக்ல போயிட்டு இருக்கு. இதெல்லாம் தானா நடந்தது. என்னிடம் தளபதி’ படம் மாதிரி நடிக்க சொன்னாங்க… அதுனாலதான் பைரவி. போக்கிரி ராஜா, முரட்டுக்காளை படங்களை பண்ணி என்னுடைய டிராக்கை மாத்திகிட்டேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *