`30 ஆண்டுகால நண்பர்; நேற்றுகூட நன்றாக பேசினார்’ - S.S.ஸ்டான்லி மறைவு குறித்து இயக்குநர் சசி

`30 ஆண்டுகால நண்பர்; நேற்றுகூட நன்றாக பேசினார்’ – S.S.ஸ்டான்லி மறைவு குறித்து இயக்குநர் சசி


`நண்பராக ஈடு செய்ய முடியாத இழப்பு’

”பேசமுடியாத சூழலில் இருக்கிறேன். நண்பர் ஸ்டான்லி, 30 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம். அருமையான மனிதர். . ‘சொல்லாமலே’ படம் இயக்க அவரும் ஒரு காரணம். ஒரு இணை இயக்குநராகத்தான் என்னிடம் அவர் நட்பானார். ‘ஏப்ரல் மாதத்தில்’ இருந்து அவருக்கு வாழ்க்கை வசந்தமானது. எதையும் ரொம்பவும் பிராக்டிக்கலாக அணுக்ககூடியவர். காரணம், படப்பிடிப்பில் சில சமயங்களில் தவிர்க்க இயலாமல் கோபப்பட நேரிடும். ஆனால், ஸ்பாட்டில் அவர் இருந்தால், அப்படி எந்த டென்ஷனும் இல்லாமல் என்னை அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். ஒரு நல்ல நண்பராகவும், ஒரு இணை இயக்குநராகவும் இருப்பார்.

நண்பர்களுடன்..

நண்பர்களுடன்..

கல்யாணமாகாதவர். அவரது அண்ணன், தங்கை ஊரில் இருக்கிறார்கள் என்பதால், இங்கே அவருக்கென நான் உள்பட சில நண்பர்கள் இருக்கிறோம். எங்களுடன் தான் பேசிக்க்கொண்டிருப்பார். அவருக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்ட போது, இயக்குநர்கள் பலரும் ஒன்று சேர்ந்து அவரை கவனித்து வந்தோம். நேற்று இரவு கூட அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நல்லபடியாக தான் பேசினார். அவரது இழப்பு நண்பராக ஈடு செய்ய முடியாத இழப்பு. கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ” என்கிறார் கண்களில் நீர்த்திரள!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *