நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்ஷய் வார்தே என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்திருக்கிறார். அத்தம்பதிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
சமீரா ரெட்டி ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு தனது பிரசவ கால அனுபவங்கள் மற்றும் தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறுகையில்,”‘நான் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்த போது எனது உடல் எடை 105 கிலோவாக அதிகரித்தது. இதனால் பிரசவத்திற்கு பிறகு ஒரு ஆண்டு வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. எனவே எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.
எனது டாக்டர்தான் நான் மன அழுத்ததில் இருந்து வெளியில் வர உதவினார். நான் மன அழுத்ததில் இருந்த போது எனது கணவர் தான் மகனுக்கு உடைகள் மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட்டார். இவ்விவகாரத்தில் பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. நான் நடிப்பை கைவிட்ட போது என்னிடம் ஏன் கைவிடுகிறாய் என்றோ அல்லது என்ன ஆனது என்றோ யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அத்துறை அப்படிப்பட்டது என்பதால் நானும் அதனை கண்டுகொள்ளவில்லை”என்றார்.
கொரோனா நேரத்தில் கூட சமீரா ரெட்டியின் இரண்டு குழந்தைகளுக்கும் கொரேனா தொற்று ஏற்பட்டது. கடைசியாக சமீரா ரெட்டி வரதநாயகா என்ற படத்தில் நடித்தார். இப்படம் 2013-ம் வெளியானது. படத்தை ஐயப்பா சர்மா இயக்கினார். இதில் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்தார்.