மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு பார்த்திபன், நாசர், கருணாஸ் இரங்கல்

மனோஜ் பாரதிராஜா மறைவிற்கு பார்த்திபன், நாசர், கருணாஸ் இரங்கல்


இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறைப் பிரபலங்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அந்தவகையில், அஞ்சலி செலுத்திய பின் மனோஜ் பாரதிராஜா குறித்துப் பேசிய பார்த்திபன், “மரணம் இயற்கை சம்பந்தப்பட்டது. அனைவருக்கும் வரும். இந்த சிறிய வயதில் மரணம் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா

இதை பாரதிராஜா சாரால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. அதுதான் எனக்குப் பயமாக இருந்தது. நான் எப்படி அவருக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று தயங்கிக் கொண்டே இருந்தேன்.

மகனுடைய இழப்பு சாதாரணமான விஷயம் கிடையாது. மனோஜுக்குப் பல கனவுகள் இருந்தன” என்று தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *