இரண்டாம் பாதி ஆரம்பிக்க மீண்டும் 50-50 காமெடி மோடுக்குள்ளே சுற்றுகிறது திரைக்கதை. பாலாஜி ஜெயராமன் வசனங்கள் கிரேஸி மோகனின் கம்பிரஸ்ட் வெர்ஷனாக ஒரு சில இடங்களில் வெடித்து சிரிக்க வைத்தாலும், ‘பாயின்ட்’, ‘மேட்டர்’ என்று பல இடத்தில் வலுக்கட்டாயமாக மட்டுமே சிரிக்கச் சொல்கிறது. அதேபோல இயல்பான திரைமொழி இருக்க வேண்டிய படத்தில், கமர்ஷியல் பாணியிலான ட்ரீட்மெண்ட் துருத்திக்கொண்டே தெரிவது ஏமாற்றமே! குடும்ப மானத்தை அப்பாவின் மரணத்திலும் தேடும் நபர்களுக்கு, அப்பா இரண்டு மனைவிகள் வைத்திருப்பது நெருடலாகத் தெரியாதது நகைமுரண். அதை ஆண்மையின் பெருமையாக நிலைநிறுத்தும் வசனங்களும் தவிர்த்திருக்க வேண்டியவை!
மொத்தத்தில் ஒரு புதிய யோசனையில் ஆர்வத்தைத் தூண்டும் இந்த ‘பெருசு’, திரைக்கதையிலும் வசனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிஜமாகவே பெரிதாகக் கொண்டாடியிருக்கலாம்.