புதிய படங்களை முதல் 3 நாள் விமர்சனம் செய்ய தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் கூறியது என்ன? | Plea seeking ban on reviews of new films released in theaters for the first 3 days

புதிய படங்களை முதல் 3 நாள் விமர்சனம் செய்ய தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் கூறியது என்ன? | Plea seeking ban on reviews of new films released in theaters for the first 3 days


சென்னை: திரையரங்குகளில் புதிதாக ரிலீஸாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆக்டிவ் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டி. சிவலிங்கம் என்ற சிவா தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது சங்கம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக புதிதாக வெளியாகும் தமிழ் திரைப்படங்களின் வெற்றிகரமான வெளியீட்டுக்கும், அதன் செலவினங்கள், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவது போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

சமீபகாலமாக புதிதாக வெளியாகும் திரைப்படங்களை யூடியூப், எக்ஸ் வலைதளப் பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் திட்டமிட்டு எதிர்மறையாக அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கட்டுப்படுத்த பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா மற்றும் பிராட்காஸ்டிங் பீரோ போன்ற அமைப்புகளும், திரைப்படங்களை கண்காணித்து தணிக்கை செய்ய சென்சார் போர்டு போன்ற அமைப்புகளும் உள்ளன. ஆனால் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க எந்த வழிமுறைகளும் நம்மிடம் இல்லை.

இதனால் இஷ்டம் போல யார் வேண்டுமென்றாலும் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த எதிர்மறை விமர்சனங்கள் படம் பார்க்க செல்லும் ரசிகர்களின் மனநிலையை மாற்றி, பல திரைப்படங்களை தோல்வியடைய செய்கிறது. இதனால் பல கோடிகளை செலவிட்டு பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாக நேரிடுகிறது. தமிழ் திரைப்படத்துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே புதிதாக திரைப்படங்கள் வெளியாகும்போது அந்த படங்களைப்பற்றி முதல் மூன்று நாட்களுக்கு விமர்சிக்க தடை விதிக்க வேண்டும்.

அதேபோல புதிய திரைப்படங்கள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூடியூப், எக்ஸ் வலைதளப்பக்கம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்,” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ். சவுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களை விமர்சனம் செய்கிறோம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்துக்களை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர். இதனால் படங்களை பார்க்கச் செல்லும் மக்களின் மனநிலை மாறுகிறது. திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குநர் குறித்தும் அவதூறு பரப்புகின்றனர். எனவே முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை விதிக்க வேண்டும்,” என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் அதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கலாம். அதேநேரம் பொதுவெளியில் விமர்சிப்பது என்பது தனிமனித கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சில திரைப்படங்களுக்கு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் வருகிறது. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும், யூடியூப் நிறுவனமும் 4 வார காலங்களி்ல் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1342022' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *