``நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." - `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி!

“நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." – `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி!


பிரபல மாடலான மீனாட்சி செளத்ரி ‘Out of love’ என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி ஆன பிறகு பட வாய்ப்புகள் வர தெலுங்கில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘இச்சாட வாகனமுலு நிலுப ராடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு, ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’, அத்வி சேஷுடன ‘HIT – The Second Case’, போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து இவரது படங்கள் சூப்பர் ஹிட் அடிக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் இணைந்து ‘குண்டூர் காரம்’ படத்தில் நடித்திருந்தார்.

Tauba%20tauba%20on%20my%20mind%20%20%20Shot%20by%20@addiction to 1.8fMakeup%20by%20@nehabagga21Hairby%20@chinnisrinu stylistStylist %20@kalyanik666Styling%20team %20@himajav29Accessories%20@zara%20Talent%20management%20%20@eternaltalentnetwork Thedalweb ``நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயல்கிறேன்.." - `கோட்' அனுபவம் குறித்து மீனாட்சி செளத்ரி நெகிழ்ச்சி!
மீனாட்சி சௌத்ரி

டோலிவுட்டில் பிஸியாக இருந்தபோதே, தமிழிலிருந்து வந்த அழைப்புதான், ‘கொலை’. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். தவிர தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) படத்தில் நடித்திருக்கிறார். தமிழில் இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் இவர் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்:

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

‘கோட்’ மீனாட்சி சௌத்ரி, டீ ஏஜுங் செய்யப்பட்ட விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த பட அறிவிப்பு வெளியான போதே, விஜய்யுடன் நடிக்கவிருப்பதை கனவாக உணர்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘கோட்’படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பதிவில், ” ‘கோட்’ படத்திலிருந்து நான் உங்கள் ஸ்ரீநிதி. இன்னும் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகிறேன். படப்பிடிப்பை சிறந்த அனுபவமாக மாற்றியதற்காக ஒட்டுமொத்த படகுழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்ரீநிதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *