கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார்.
அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு அமானுஷ்யமான முறையில் இறந்துபோகிறார்.
அதே புராஜெக்ட்டின் கட்டுமான பணிகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு தற்கொலைகளும் நிகழ்கின்றன. பாவனாவும் அவரின் நண்பரும் தங்கியிருக்கும் வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.
இதற்கு பின்னாலுள்ள மர்மத்தைப் பாவனா & டீம் கண்டறிந்ததா என்பதே “தி டோர்’ படத்தின் கதை.
வெகு நாட்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் பாவனா. முழுப் படத்தின் பொறுப்பும் இவரிடமே இருக்க, அதை ஓரளவு காப்பாற்ற முயன்றிருக்கிறார்.
அவரது வீட்டு நண்பராக வரும் சிந்தூரி, ‘சிடு மூஞ்சி’யாகவே படம் முழுக்க வருவது ஆரம்பத்தில் மிகை நடிப்பாகத் தெரிந்தாலும், போகப்போகப் பழகிவிடுகிறது. சாதாரண காட்சியில் கூட தத்துவப் பேராசிரியர் போலப் பேசி, செயற்கைத் தனத்தை வாரி வழங்குகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.