`புதிய அரசியலை புகுத்தாதீர்கள்’
புதிய பிரச்னையை உருவாக்க திரு.மோடி முதல் திரு.டிரம்ப் வரை மேலிடத்து உத்தரவு என நீங்கள் யாரையாவது கொண்டுவர முயற்சிக்கலாம். நடந்தது இவ்வாறு இருக்க ஏதோ மேலிடத்து உத்தரவு என்ற புதிய அரசியலை புகுத்த முயற்சித்துள்ளீர்கள். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல்வேறு அரசியல் நடக்கின்றது.
நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். ஏற்கனவே நாங்கள் அக்டோபர் 30-க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று தருவோம் என உறுதி அளித்தாலும், திரு.முரளி மற்றும் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் வேண்டுகோளை சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம்.

அதன் பயனாக 8கோடி வரை பெற இயலும் என்ற நிலையை எய்தினோம்.
இறுதியாக திரு.தனுஷ் அவர்கள் “அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை என்றாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர்கள் சங்க வேண்டுகோளுக்காகவும் மட்டுமே நான் இதற்கு சம்மதிக்கிறேன்.
இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட வழங்க நான் தயாராக இல்லை வேண்டுமானால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கண்டிப்புடன் கூறி விட்டார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.