பெருமைமிக்க கிளாசிக் படங்களை எல்லாம் 4கே தொழில்நுட்பத்தில் ரெடி செய்து வரும் என்.எஃப்.டி.சி. – இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் தொகுப்பிலிருந்து 35 மிமீ வெளியீட்டு அச்சிலிருந்து டிஜிட்டல் முறையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பிரின்ட் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரைப்பட ஆவணக் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட தகவலை இயக்குநர் சீனுராமசாமி பகிர்ந்திருந்தார்.
மறைந்த இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளும், ஒளிப்பதிவாளருமான பி.ஆர்.விஜயலட்சுமியிடம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பற்றி அப்பா பகிர்ந்த விஷயங்கள் எதுவும் உண்டா?” எனக் கேட்டோம்.

”இந்தப் படம் வரும் போது நான் ரொம்ப சின்னக் குழந்தை. ஆனா, இந்தப் படம், ‘கர்ணன்’ மாதிரி சில படங்களுக்கு அப்பாவுடன் ப்ரிவியூ போய் பார்த்திருக்கேன். தவிர, அப்பா ரொம்பவே அமைதியான சுபாவம் கொண்டவர். அப்பா – மகள்னால, இன்னிக்கு தலைமுறை அப்பா -மகள்னா ஒருத்தரை ஒருத்தர் நண்பர்களாக பழகுறாங்க. ஆனா, அந்த காலகட்டம் அப்படியில்ல. அப்பா என்கிட்ட சினிமா பத்தி பேசுனது கிடையாது. இந்தப் படம் பத்தி பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம்னா, அப்பாவோட சேர்ந்து படம் பார்த்தது தான். இன்னொரு விஷயம், இந்தப் படத்தின் வெற்றி விழா மதுரையில் நடந்தது. அதோட விழாவுக்கு அப்பாவும் சிவாஜி அங்கிளும் சேர்ந்து போயிருந்தது ஞாபகத்துல இருக்குது. எகிப்தில் Afro-Asian திரைப்பட விழா நடந்தது. தமிழ்ல இருந்து முதல் முறையாக தேர்வான படமாக இந்தப் படம் இருந்தது. சிவாஜி அங்கிளுக்கு விருது கிடைச்சதும் ஞாபகத்துல இருக்கு” என்கிறார் விஜயலட்சுமி.