ஆசியக் கண்டத்தில் எவரும் சாதிக்க முடியாததை நம்ம ஊர் பண்ணைக்காரர் இளையராஜா சாதித்துக் காட்டியதை ஒன்றிய அரசு அவர்களின் ஊடகங்களிலும், வானொலியிலும் காண்பிக்காததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மும்பை, கல்கத்தா, டெல்லி என இந்தியாவின் எல்லா இடங்களிலும் இவரின் சிம்பொனி இசையின் புகழ் பரவ வேண்டும். தமிழரின் பெருமையை அறியாதவர்கள்தான் வடநாட்டில் அதிகம்.
இசைஞானி வளம் மென்மேலும் உயர வேண்டும். இந்தியா முழுவதும் அவரது இசை பரவ வேண்டும். இளையராஜாவிற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு புத்தி வரவில்லையே. லண்டனில் இருந்து டெல்லி வந்த அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.