தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது தொண்டு நிறுவனம் மூலம், சேவைகளும் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘திங்க் டேங் பிரிட்ஜ் இந்தியா’ என்ற அமைப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸி’ல் இவ்விருதை வழங்கியது.
இவ்விழாவை, நாடாளுமன்ற பிரிட்டிஷ்-இந்திய உறுப்பினர் நவேந்து மிஸ்ரா மற்றும் சோஜன் ஜோசப், பாப் பிளாக்மேன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தூதர்கள் கலந்துகொண்டனர்.